search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் வாழை இலை விலை 3 மடங்கு அதிகரிப்பு
    X

    திண்டுக்கல்லில் வாழை இலை விலை 3 மடங்கு அதிகரிப்பு

    திண்டுக்கல்லில் வாழை இலையின் விலை கடந்த வாரத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து பெங்களூர், கிருஷ்ணகிரி, சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த சில நாட்களாக சூறை காற்றுடன் பெய்த மழையினால் வாழை இலையின் வரத்து குறைந்தது. இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதனால் கடந்த வாரம் ஒரு கட்டு ரூ.500-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1600-க்கு விற்கப்படுகிறது. வெளியூர்களுக்கு அனுப்ப இலை பற்றாக்குறையாக இருப்பதால் தூத்துக்குடி, தஞ்சாவூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலை வாங்கப்படுகிறது.

    இது குறித்து வியாபாரி செந்தில்குமார் கூறுகையில், பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்ட பிறகு வாழை இலைக்கு அமோக வரவேற்பு இருந்தது. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மழை குறைவால் ஒரு சில இடங்களில் விளைச்சல் குறைந்திருந்த போதிலும் பாதுகாத்து வந்தனர்.

    தற்போது சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வாழை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இந்த விலை ஏற்றம் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×