என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை அருகே 2-வது மனைவிக்கு கொலை மிரட்டல்- கணவர் மீது போலீசில் புகார்
    X

    மயிலாடுதுறை அருகே 2-வது மனைவிக்கு கொலை மிரட்டல்- கணவர் மீது போலீசில் புகார்

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 2-வது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணக்குடியை சேர்ந்தவர் கமலகண்ணன். இவரது 2-வது மனைவி சத்தியபாமா (வயது 30). இவர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமியிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கமலகண்ணன் என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது 25 பவுன் நகையும், ரூ.10 லட்சம் மதிப்புடைய பொருட்களும் வரதட்சனையாக கொடுத்தோம். திருமணத்திற்கு பின்புதான் அவர் தனது முதல் திருமணத்தை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்காமல் மேலும் வியாபாரம் செய்ய ரூ.5 லட்சம் வாங்கி கொடு என்று என்னை கொடுமைப்படுத்தி வந்தார்.

    இந்த நிலையில் அவர் குத்தாலத்தை சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணை 3-வது திருமணம் செய்து அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதுபற்றி கேட்டபோது, கமலகண்ணன் என்னை அடித்து சித்ரவதை படுத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.

    எனவே என்னை ஏமாற்றி திருமணம் செய்த கமலகண்ணன், அவரது அண்ணன் சீனிவாசன் மீதும், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் குணசேகர், செந்தில் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×