என் மலர்
செய்திகள்

திருச்சியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.38 லட்சம் தங்கம் கடத்தல்
திருச்சியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
ஆலந்தூர்:
திருச்சியில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் மூலம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை திருச்சியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் பையை திறந்து பார்த்தனர். அதில் 1 கிலோ 170 கிராம் தங்ககட்டிகளும், தங்க நகைகளும் இருந்தன.
இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை. இதைத்தொடர்ந்து தங்க கட்டி, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.38 லட்சம் ஆகும்.
இதுகுறித்து தங்கம் கடத்தி வந்த 2 பேரிடம் விசாரித்த போது சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க விமானத்தில் திருச்சி சென்றுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு வந்ததாக கூறினர். #ChennaiAirport
திருச்சியில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் மூலம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை திருச்சியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் பையை திறந்து பார்த்தனர். அதில் 1 கிலோ 170 கிராம் தங்ககட்டிகளும், தங்க நகைகளும் இருந்தன.
இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை. இதைத்தொடர்ந்து தங்க கட்டி, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.38 லட்சம் ஆகும்.
இதுகுறித்து தங்கம் கடத்தி வந்த 2 பேரிடம் விசாரித்த போது சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க விமானத்தில் திருச்சி சென்றுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு வந்ததாக கூறினர். #ChennaiAirport
Next Story






