search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.38 லட்சம் தங்கம் கடத்தல்
    X

    திருச்சியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.38 லட்சம் தங்கம் கடத்தல்

    திருச்சியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    திருச்சியில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் மூலம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று மாலை திருச்சியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் பையை திறந்து பார்த்தனர். அதில் 1 கிலோ 170 கிராம் தங்ககட்டிகளும், தங்க நகைகளும் இருந்தன.

    இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை. இதைத்தொடர்ந்து தங்க கட்டி, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.38 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து தங்கம் கடத்தி வந்த 2 பேரிடம் விசாரித்த போது சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க விமானத்தில் திருச்சி சென்றுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு வந்ததாக கூறினர். #ChennaiAirport
    Next Story
    ×