என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த கல்லூரி மாணவி
Byமாலை மலர்15 April 2019 12:21 PM GMT (Updated: 15 April 2019 12:21 PM GMT)
வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம் அடைந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையை சேர்ந்தவர் கீர்த்தனா. (வயது 24). திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். இவரது உறவினர் சங்கர். (24). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த விசயம் கீர்த்தனாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர்.
அதன்படி வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு தங்களது புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் 2 தரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேசினர். இதற்கு கீர்த்தனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு தங்களுக்கும், மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிக்கொடுத்து சென்றனர். 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என கீர்த்தனாவை சங்கருடன் அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையை சேர்ந்தவர் கீர்த்தனா. (வயது 24). திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். இவரது உறவினர் சங்கர். (24). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த விசயம் கீர்த்தனாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர்.
அதன்படி வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு தங்களது புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் 2 தரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேசினர். இதற்கு கீர்த்தனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு தங்களுக்கும், மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிக்கொடுத்து சென்றனர். 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என கீர்த்தனாவை சங்கருடன் அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X