என் மலர்
செய்திகள்

திண்டுக்கல் அருகே மான் இறைச்சி விற்ற 2 பேர் கைது
திண்டுக்கல் அருகே மான் இறைச்சி விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொடைரோடு:
திண்டுக்கல் அருகில் உள்ள அம்மையநாயக்கனூரை சேர்ந்தவர் சிமியோன்ராஜா (வயது32). இவர் பெட்ரோல் பங்க் அருகே மான் இறைச்சி விற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வனத்துறை அலுவலர்கள் சுந்தர்ராஜன், ராஜேந்திரன் ஆகியோர் ரகசியமாக கண்காணித்தனர்.
சிமியோன்ராஜாவிடம் சென்று இறைச்சி உள்ளதா? என கேட்டதற்கு மறைவாக வைத்து விற்பனைசெய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரையும் விற்பனைக்காக வைத்திருந்த மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சிறுமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த மோசே (67) என்பவர் மான் வேட்டையாடி அதனை சிமியோன் ராஜாவிடம் விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் மாவட்ட வன அலுவலர் வித்யா முன்பு ஆஜர்படுத்தினர்.
அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போலீசில் ஒப்படைத்து கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள அம்மையநாயக்கனூரை சேர்ந்தவர் சிமியோன்ராஜா (வயது32). இவர் பெட்ரோல் பங்க் அருகே மான் இறைச்சி விற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வனத்துறை அலுவலர்கள் சுந்தர்ராஜன், ராஜேந்திரன் ஆகியோர் ரகசியமாக கண்காணித்தனர்.
சிமியோன்ராஜாவிடம் சென்று இறைச்சி உள்ளதா? என கேட்டதற்கு மறைவாக வைத்து விற்பனைசெய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரையும் விற்பனைக்காக வைத்திருந்த மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சிறுமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த மோசே (67) என்பவர் மான் வேட்டையாடி அதனை சிமியோன் ராஜாவிடம் விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் மாவட்ட வன அலுவலர் வித்யா முன்பு ஆஜர்படுத்தினர்.
அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போலீசில் ஒப்படைத்து கைது செய்யப்பட்டனர்.
Next Story