என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடை விடுமுறை தொடங்கியது - ஜூன் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு
Byமாலை மலர்14 April 2019 3:37 AM GMT (Updated: 14 April 2019 3:37 AM GMT)
ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததுள்ள நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து மீண்டும் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. #SummerHolidays #Schools
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் நிறைவு பெற்றது.
வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதால், விரைவில் ஆண்டு இறுதி தேர்வை முடிக்க பள்ளிக்கல்வி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 13-ந் தேதியுடனும் (நேற்று), 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 12-ந் தேதியுடனும் (நேற்று முன்தினம்) ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கடந்த மாதம் 30-ந் தேதியில் இருந்து 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது. ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததுள்ள நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அநேகமாக ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்றும், வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு ஓரிரு நாட்கள் தள்ளிப்போகலாம் என்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #SummerHolidays #Schools
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் நிறைவு பெற்றது.
வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதால், விரைவில் ஆண்டு இறுதி தேர்வை முடிக்க பள்ளிக்கல்வி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 13-ந் தேதியுடனும் (நேற்று), 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 12-ந் தேதியுடனும் (நேற்று முன்தினம்) ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கடந்த மாதம் 30-ந் தேதியில் இருந்து 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது. ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததுள்ள நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அநேகமாக ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்றும், வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு ஓரிரு நாட்கள் தள்ளிப்போகலாம் என்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #SummerHolidays #Schools
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X