என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே அங்கன்வாடி பெண் ஊழியர் அடித்து கொலை
Byமாலை மலர்10 April 2019 10:57 AM GMT (Updated: 10 April 2019 10:57 AM GMT)
திண்டுக்கல் அருகே அங்கன்வாடி பெண் ஊழியரை அடித்துக் கொன்ற வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள அய்யலூரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி (வயது 54). இவர் குப்பம்பட்டியில் உள்ள சத்துணவு மையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மகள் மல்லிகா (31) என்பவருக்கும் சரவணக்குமாருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரவணக்குமார் வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் வாங்கி செலவு செய்து வந்தார். மேலும் அக்கம் பக்கத்திலும் கடன் வாங்கி இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மல்லிகா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த சில நாட்களாகவே சரவணக்குமார் தனது மாமியாரிடம் சென்று எனது மனைவியை என் வீட்டுக்கு அனுப்பி வை என தகராறு செய்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
மேலும் பத்மாவதியையும் சரவணக்குமார் தாக்கி மிரட்டி வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு விடுப்பில் இருந்த பத்மாவதியை சரவணக்குமார் நேற்று கடுமையாக தாக்கி கீழே தள்ளினார்.
இதில் அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மல்லிகா தனது தாயாரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மல்லிகா வடமதுரை போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாக்கியதால்தான் தாய் இறந்து விட்டார் என கூறினார். அதன் பேரில் போலீசார் சரவணக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திண்டுக்கல் அருகே உள்ள அய்யலூரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி (வயது 54). இவர் குப்பம்பட்டியில் உள்ள சத்துணவு மையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மகள் மல்லிகா (31) என்பவருக்கும் சரவணக்குமாருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரவணக்குமார் வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் வாங்கி செலவு செய்து வந்தார். மேலும் அக்கம் பக்கத்திலும் கடன் வாங்கி இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மல்லிகா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த சில நாட்களாகவே சரவணக்குமார் தனது மாமியாரிடம் சென்று எனது மனைவியை என் வீட்டுக்கு அனுப்பி வை என தகராறு செய்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
மேலும் பத்மாவதியையும் சரவணக்குமார் தாக்கி மிரட்டி வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு விடுப்பில் இருந்த பத்மாவதியை சரவணக்குமார் நேற்று கடுமையாக தாக்கி கீழே தள்ளினார்.
இதில் அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மல்லிகா தனது தாயாரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மல்லிகா வடமதுரை போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாக்கியதால்தான் தாய் இறந்து விட்டார் என கூறினார். அதன் பேரில் போலீசார் சரவணக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X