search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகனுக்கு மனநல பாதிப்பு - தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    மகனுக்கு மனநல பாதிப்பு - தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை

    திருப்பரங்குன்றம் அருகே மகனுக்கு மனநல பாதிப்பு இருந்ததால் தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன் குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சாந்தி (வயது40) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சாந்தியின் மகனுக்கு சமீபத்தில் மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சாந்தி சம்பவத்தன்று மதியம் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மேலூர் சொக்கம்பட்டி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவரது மனைவி அழகு. கணவன் -மனைவி இருவரும் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் செல்வத்துக்கு குடிபழக்கம் காரணமாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×