search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை புதன்கிழமை மீண்டும் தொடக்கம்
    X

    ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை புதன்கிழமை மீண்டும் தொடக்கம்

    ஜெயலலிதா மரணம் குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் புதன்கிழமை மீண்டும் தொடங்க உள்ளது. #JayaDeathprobe #OPanneerselvam
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் விசாரணை தொடங்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதையடுத்து, அப்பல்லோ டாக்டர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது. இவர்கள் வருகிற புதன்கிழமை அல்லது அதற்கு முன்பு ஆஜராக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, புதன்கிழமை முதல் விசாரணை நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆஸ்பத்திரி சார்பில் ஒரு மருத்துவ குழு அமைத்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மீண்டும் ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை தொடங்குகிறது. இதுபற்றி, சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்யும் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது, “துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. தற்போது தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு உடனே சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார். எனவே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #JayaDeathprobe #OPanneerselvam
    Next Story
    ×