search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை அருகே குடிநீர் தகராறில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
    X

    வடமதுரை அருகே குடிநீர் தகராறில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

    வடமதுரை அருகே குடிநீர் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புத்தூர் ஆதி திராவிடர் காலனியில் இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இவர்களுக்குள் அடிக்கடி மோதல் எற்பட்டு வந்ததால் ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து வந்தனர்.

    நேற்று மாலை இங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த போது மீண்டும் அவர்களுக்கள் மோதல் ஏற்பட்டது.

    இதனால் கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களால் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் முருகன் உள்பட 2 பேருக்கு அரிவாள வெட்டு விழுந்தது. மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து வடமதுரை போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×