search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் பகுதியில் குடிநீருக்கு தவம் கிடக்கும் கிராம மக்கள்
    X

    ஆத்தூர் பகுதியில் குடிநீருக்கு தவம் கிடக்கும் கிராம மக்கள்

    ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சித்தையன்கோட்டை, செம்பட்டி, சீவல்சரகு, சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கோடைகாலம் தொடங்கியது முதல் தண்ணீர் தேவை மேலும் அதிகரிப்பால் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. குடிநீர் குழாய்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் காலி குடங்களை வரிசையில் வைத்து தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாய கிணறுகளில் தண்ணீர் பிடித்து அதனை குடிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிநீர் பிரச்சினையால் பல்வேறு கிராமங்களில் அடிக்கடி சாலை மறியல் போராட்டங்களும் யூனியன் அலுவலக அதிகாரிகளை கண்டித்து முற்றுகையிடும் போராட்டமும் நடந்து வருகிறது.

    நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தாலும் குறைந்த அளவு தண்ணீரே மேல்நிலை தொட்டியில் சேமிக்க முடிகிறது. அந்த தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடமும் தண்ணீர் பிரச்சினை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவதால் பல கிராமங்களை கண்டு கொள்ளாமல் அரசியல் கட்சியினர் வந்து விடுகின்றனர்.

    Next Story
    ×