search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் அருகே லாரியில் இருந்த ரூ.4 லட்சம் தைலப்பெட்டிகள் கொள்ளை
    X

    மேலூர் அருகே லாரியில் இருந்த ரூ.4 லட்சம் தைலப்பெட்டிகள் கொள்ளை

    மேலூர் அருகே லாரியில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள தைலப் பெட்டிகளை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மேலூர்:

    பிரபல நிறுவனத்தின் தலைவலி தைலப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து மதுரைக்கு லாரி புறப்பட்டது.

    இன்று காலை மேலூர் அருகே 4 வழிச்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு டிரைவர் டீ குடிக்க சென்றார்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தார்ப்பாயை கிழித்து லாரியில் இருந்த 45 தலைவலி தைல அட்டைப் பெட்டிகளை திருடிக் கொண்டு தப்பினர்.

    சிறிது நேரத்தில் அங்கு வந்த டிரைவர் தார்ப்பாய் கிழிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன தைலத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    Next Story
    ×