என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரத்தில் விசா முடிந்தும் தங்கி இருந்த இலங்கை வாலிபர் கைது
Byமாலை மலர்21 March 2019 11:43 AM GMT (Updated: 21 March 2019 11:43 AM GMT)
ராமநாதபுரத்தில் விசா முடிந்தும் நாட்டை விட்டு செல்லாமல் இங்கேயே தங்கி இருந்த இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு தியேட்டர் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.
பின்னர் வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் இலங்கை திரிகோணமலை செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் மோகனரூபன் (வயது25) என தெரியவந்தது.
மோகனரூபன் விசா பெற்று சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். 3 மாதத்திற்கு முன்பு விசா காலாவதியாகி விட்டது. ஆனாலும் அவர் இலங்கை செல்லாமல் ராமநாதபுரத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகனரூபனை கைது செய்தனர்.
ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு தியேட்டர் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.
பின்னர் வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் இலங்கை திரிகோணமலை செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் மோகனரூபன் (வயது25) என தெரியவந்தது.
மோகனரூபன் விசா பெற்று சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். 3 மாதத்திற்கு முன்பு விசா காலாவதியாகி விட்டது. ஆனாலும் அவர் இலங்கை செல்லாமல் ராமநாதபுரத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகனரூபனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X