search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி
    X

    ஆரல்வாய்மொழியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி

    ஆரல்வாய்மொழியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் முன்னாசர்தார் (வயது 28). இவர் ஆரல்வாய் மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி வேலைபார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை அவர் செங்கல் சூளையில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேவசகாயம் மவுண்ட் அருகே அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு 2 கால்களும் துண்டானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அதனைப் பார்த்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் அங்கு பிணமாக கிடந்த முன்னாசர்தாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னா சர்தாரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வந்த பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
    Next Story
    ×