search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயக்கோட்டை அருகே 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
    X

    ராயக்கோட்டை அருகே 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    ராயக்கோட்டை அருகே தந்தை திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த சிந்ஜேப்பள்ளி பெரனூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மகள் பானுப்பிரியா (வயது 14). இவர் தருமபுரி மாவட்டம் புலியகரை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு சென்ற அவர் தனது தந்தையிடம் படிக்க புலியகரைக்கு செல்ல மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் தனது மகளை திட்டியதாக கூறப்படுகிறது. 

    இதில் மனமுடைந்த காணப்பட்ட பானுப்பிரியா சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக பானுப்பிரியா இறந்தார். இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் வழககுபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×