search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடி அருகே வியாபாரியிடம் 10 பவுன் நகை திருட்டு
    X

    பரமக்குடி அருகே வியாபாரியிடம் 10 பவுன் நகை திருட்டு

    பரமக்குடி அருகே வியாபாரியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் 10 பவுன் நகை திருடி சென்றனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி வைகைநகரை சேர்ந்தவர் ராசு. ஆடு வியாபாரம் செய்து வருகிறார். ஆற்றுப்பாலம் அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் அடகு வைத்திருந்த 10½ பவுன் நகைகளை ராசு திருப்பினார். பின்னர் அந்த நகையை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து புறப்பட்டார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், ராசுவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பி பெட்டியில் இருந்த நகையை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×