search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
    X

    கோவை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

    கோவை அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை பாரதி காலனியை சேர்ந்தவர் பிரின்ஸ் ஜோசப் (32). கால் டாக்சி டிரைவர்.சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் நகை திருட்டு போய் இருந்தது. இது குறித்து பிரின்ஸ் ஜோசப் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் திருப்பதி (47). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகையை காணவில்லை. அதனை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.இது குறித்து பேரூர் போலீசில் திருப்பதி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×