என் மலர்
செய்திகள்

அணைக்கட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் பலாத்காரம்
அணைக்கட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யயப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் உறவினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
அணைக்கட்டு அருகே உள்ள இலவப்பாடியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியின் 20 வயது மகள் மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர்.
அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
தனியாக இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதனால் இளம்பெண் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
வீடு திரும்பிய பெற்றோர் மகளின் நிலை கண்டு விசாரித்தனர். அவரது உடலில் காயங்கள் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டனர்.
அப்போது நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கூறியுள்ளார். இதுபற்றி விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அணைக்கட்டு அருகே உள்ள இலவப்பாடியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியின் 20 வயது மகள் மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர்.
அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
தனியாக இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதனால் இளம்பெண் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
வீடு திரும்பிய பெற்றோர் மகளின் நிலை கண்டு விசாரித்தனர். அவரது உடலில் காயங்கள் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டனர்.
அப்போது நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கூறியுள்ளார். இதுபற்றி விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






