என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே குடிபோதையில் நண்பர்கள் பயங்கர மோதல்
    X

    தேனி அருகே குடிபோதையில் நண்பர்கள் பயங்கர மோதல்

    தேனி அருகே குடிபோதையில் நண்பரை தாக்கிய வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தேனி:

    தேனி அருகே உள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சுரேஷ் (வயது23). இவரது நண்பர்களான சதீஷ், வருசநாடு வேங்கையன், நல்லு ஆகியோருடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது தகராறாக மாறியது. வாக்குவாதம் முற்றியதால் சதீசை அவரது நண்பர்கள் தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர்.

    மேலும் அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து சுரேசை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிசிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து சுரேசின் தாய் செல்லம்மாள் தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். புகாரை விசாரிக்குமாறு வீரபாண்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். இதன் பேரில் சதீஷ், வேங்கையன், நல்லு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×