என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஆசிரியர் பலி
Byமாலை மலர்25 Feb 2019 5:56 PM GMT (Updated: 25 Feb 2019 5:56 PM GMT)
மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆசிரியர் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இளையான்குடி:
இளையான்குடியை அடுத்த பூச்சியேந்தல் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் தனபாபு (வயது 35). இவர் திருவேங்கடம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலா (27) என்பவருடன் ஒரு மோட்டார்சைக்கிளில் காளையார்கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
இளையான்குடி-காளையார்கோவில் நெடுஞ்சாலையில் மாதவநகர் அருகே எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத நிலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் தனபாபு தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். பாலா பலத்த காயத்துடன் இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் மோதிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமின்றி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இளையான்குடியை அடுத்த பூச்சியேந்தல் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் தனபாபு (வயது 35). இவர் திருவேங்கடம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலா (27) என்பவருடன் ஒரு மோட்டார்சைக்கிளில் காளையார்கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
இளையான்குடி-காளையார்கோவில் நெடுஞ்சாலையில் மாதவநகர் அருகே எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத நிலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் தனபாபு தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். பாலா பலத்த காயத்துடன் இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் மோதிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமின்றி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X