search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து சென்னை வந்த நெல்லை மாணவி
    X

    பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து சென்னை வந்த நெல்லை மாணவி

    திருநெல்வேலியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து சென்னைக்கு வந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்றார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அவர் திருநெல்வேலியை சேர்ந்த அம்மு என்பதும் பிளஸ்-2 படித்துவரும் அவர் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு வந்து இருப்பதும் தெரிந்தது.

    இதையடுத்து மாணவியை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
    Next Story
    ×