search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போனில் பேச்சை வெளியிட்டதால் தகராறு: நண்பனை கொன்ற வாலிபர் கைது
    X

    செல்போனில் பேச்சை வெளியிட்டதால் தகராறு: நண்பனை கொன்ற வாலிபர் கைது

    செல்போனில் கிண்டலாக பேசியதை வெளியிட்டதால் நண்பனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருத்தணி:

    திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (18). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடராமன் (26). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    நேற்று முன்தினம் இருவரும் விளையாட்டாக, தாழவேடு மக்களை பற்றி வெங்கடராமன் கிண்டல் செய்து பேசினார். அதை விஜய் அலைபேசி மூலம் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டார்.

    இதையடுத்து தாழவேடு காலனி மக்கள், நேற்று காலை திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழவேடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சமரசம் செய்ய வந்த திருத்தணி போலீசாரிடம் வெங்கடேசனை கைது செய்து வேண்டும் என வலியுறுத்தினர். இதை அறிந்ததும், வெங்கடராமன், விஜய் ஆகியோர் தலைமறைவாகினர். இதையடுத்து வெங்கடராமனின் தந்தை கன்னியப்பனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நேற்று இரவு விஜய், வெங்கடராமன் தமிழக- ஆந்திரா எல்லையான பொன்பாடி அருகே வயல் வெளியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். போதையில் வெங்கடராமன், உன்னால் தான் நான் வீடியோவில் நடித்தேன், என் தந்தையை போலீசார் பிடித்துச் சென்றனர் என கூறி கட்டையால் விஜய்யை தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    விஜய் இறந்ததை உறுதி செய்ததும் வெங்கடராமன் திருத்தணி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×