search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் அருகே தீக்காயம் அடைந்த கர்ப்பிணி மரணம்- குழந்தையும் இறந்தது
    X

    அரக்கோணம் அருகே தீக்காயம் அடைந்த கர்ப்பிணி மரணம்- குழந்தையும் இறந்தது

    அரக்கோணம் அருகே தீக்காயம் அடைந்த இளம்பெண்ணும் குழந்தையும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் கீழ்குப்பம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி அம்மு (வயது 30). 9 மாத கர்ப்பிணி கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி இரவு கடையில் டிபன் வாங்கி வருவதாக ராஜேஷ் வெளியே சென்றுள்ளார்.

    அப்போது அம்மு ஸ்டவ் பற்ற வைத்தார். எதிர்பாராத விதமாக அம்முவின் சேலையில் தீ பிடித்தது. இதனால் அம்மு அலறி துடித்தார். அம்முவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அம்முவை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அம்மு, அதன் பின்னர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்து ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி அம்முக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அம்முவுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்தது.

    இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து கோமதியும் இறந்துவிட்டார். டி.எஸ்.பி. துரைபாண்டியன், இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜேஷ், அம்முவுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீக்காயம் அடைந்த இளம்பெண்ணும் குழந்தையும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் கீழ்குப்பம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×