என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே விபத்து - முதியவர் பலி
பாகூர்:
சிதம்பரத்தை அடுத்த சீர்காழியை சேர்ந்தவர் முருகன் (வயது35), என்ஜினீயர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிலரும் சென்னையில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்கள். இவர் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்து பின்னர் மோட்டார் சைக்கிள்களில் செல்வது வழக்கம்.
அதுபோல் நேற்று இரவு முருகன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் வழியில் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது சுமார் 50 வயதுமதிக்கதக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குபதிவு செய்து இறந்த முதியவர் யார்-எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்