என் மலர்
செய்திகள்

சென்னிமலை அருகே வயதான தம்பதியினர் வெட்டி படுகொலை
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வயதான தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ளது கோனார்காடு. இந்த ஊரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). இவரது மனைவி துளசிமணி (60).
இந்த வயதான தம்பதியினர் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் மர்மகும்பல் திமு...திமு...வென புகுந்தது.
உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டினர். மேலும் இரும்பு கம்பிகளாலும் தாக்கினர்.
இதில் கணவனும் மனைவியும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கொலையாளிகள் என்ன காரணத்துக்காக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
சம்பவ இடத்துக்கு சென்னிமலை போலீசார் விரைந்து உள்ளனர்.
சென்னிமலை அருகே உள்ளது கோனார்காடு. இந்த ஊரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). இவரது மனைவி துளசிமணி (60).
இந்த வயதான தம்பதியினர் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் மர்மகும்பல் திமு...திமு...வென புகுந்தது.
உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கணவன்- மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டினர். மேலும் இரும்பு கம்பிகளாலும் தாக்கினர்.
இதில் கணவனும் மனைவியும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கொலையாளிகள் என்ன காரணத்துக்காக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
சம்பவ இடத்துக்கு சென்னிமலை போலீசார் விரைந்து உள்ளனர்.
Next Story






