search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி மூதாட்டி பலி
    X

    ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி மூதாட்டி பலி

    ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கன். இவரது மனைவி ராஜம்மாள் (70). இவர் நேற்று இரவு அங்கு உள்ள கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு சாலை ஓரமாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சென்னையிலிருந்து ஆந்திராவை நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலு விசாரணை செய்தார். லாரி டிரைவர் தினகரன் (45) கைது செய்யப்பட்டார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர்.

    Next Story
    ×