என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருத்தாசலம் அருகே விபத்து- கார் மோதி லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்14 Feb 2019 11:25 AM GMT (Updated: 14 Feb 2019 11:25 AM GMT)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இன்று காலை கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை 8 மணியளவில் விருத்தாசலம்-சேலம் புறவழிச்சாலையில் பொன்னேரி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அதேபோல் செந்துறை தாலுகா கடந்தைப்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான வரதராஜன்(35) என்பவர் இன்று காலை தான் ஓட்டி வந்த லாரியை விருத்தாசலம் புறவழிச்சாலையில் நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது வடலூரை சேர்ந்த டிரைவர் சிவக்குமார்(50) புதுக்கூரைப் பேட்டையில் இருந்து ஈரோட்டை நோக்கி காரை ஓட்டி சென்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ராஜேந்திரன், லாரி டிரைவர் வரதராஜன் ஆகியோர் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் கார் டிரைவர் சிவக்குமார் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விருத்தாசலம் போலீசில் சரண் அடைந்தார்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று கார் மோதி இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை 8 மணியளவில் விருத்தாசலம்-சேலம் புறவழிச்சாலையில் பொன்னேரி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அதேபோல் செந்துறை தாலுகா கடந்தைப்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான வரதராஜன்(35) என்பவர் இன்று காலை தான் ஓட்டி வந்த லாரியை விருத்தாசலம் புறவழிச்சாலையில் நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது வடலூரை சேர்ந்த டிரைவர் சிவக்குமார்(50) புதுக்கூரைப் பேட்டையில் இருந்து ஈரோட்டை நோக்கி காரை ஓட்டி சென்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ராஜேந்திரன், லாரி டிரைவர் வரதராஜன் ஆகியோர் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் கார் டிரைவர் சிவக்குமார் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விருத்தாசலம் போலீசில் சரண் அடைந்தார்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று கார் மோதி இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X