search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் படிக்கட்டில் தொங்கிய முதியவர் கீழே விழுந்து பலி

    பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் படிக்கட்டில் தொங்கிய முதியவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    காலை, மாலை நேரங்களில் ஏராளமான பயணிகள் ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். இதனால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் தொங்கியபடி சென்ற முதியவர் கீழே விழுந்து பலியானார்.

    செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயில் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது கூலி தொழிலாளி விநாயகம் (65) என்பவர் ரெயிலில் ஏற முயன்றார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடி நின்றார்.

    ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் விநாயகரம் நிலை தடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விநாயகம் பரிதாபமாக இறந்தார்.

    கடந்த ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் தண்டவாள மின்கம்பத்தில் மோதி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×