search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் பஸ் நிலையத்தில் கைப்பை திருடிய 3 பெண்கள் கைது
    X

    பெரியார் பஸ் நிலையத்தில் கைப்பை திருடிய 3 பெண்கள் கைது

    பெரியார் பஸ் நிலையத்தில் கைப்பை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள அச்சம்பத்து பஜனை மடத்து தெருவைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி கயல்விழி (30). இவர், நேற்று பெரியார் பஸ் நிலையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த 3 பெண்கள் திடீரென கயல்விழியிடம் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு ஓடினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கயல்விழி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் துரத்திச் சென்று 3 பேரையும் பிடித்தனர்.

    திடீர்நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்த கணேசன் மனைவி சுதா (40), சுரேஷ் மனைவி ரேவதி (25), கிருஷ்ணா மனைவி காமாட்சி (35) என தெரியவந்தது.

    3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×