என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே பெட்டி கடையில் பூட்டை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்6 Feb 2019 10:25 AM GMT (Updated: 6 Feb 2019 10:25 AM GMT)
ஒரத்தநாட்டில் பெட்டி கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு புதூர்கிராமம் ஆர்.வி.நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ராஜாங்கம். மாற்றுதிறனாளியான இவர் ஒரத்தநாடு தேர்வுநிலை பேரூராட்சி அருகே சாலையோரம் கடை வைத்து வலையில் மற்றும் பெண்கள் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். தினமும் காலை 8 மணிக்கு கடையை திறந்து வியாபாரம் முடிந்து மாலை 6 மணிக்கு கடையை பூட்டி சென்று விடுவார்.
அதன்படி நேற்று மாலை வழக்கம் போல் 6 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்த ராஜாங்கம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X