search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கானத்தூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை
    X

    கானத்தூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை

    கானத்தூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    கானத்தூரை அடுத்த உத்தண்டி காட்டகிரண்ட் பகுதியில் வசித்து வருபவர் சுனில். இவர் தரமணியில் உள்ளவர் உலக வங்கி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 90 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

    இது குறித்து கானத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர்.

    எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×