search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டை ஆசிரியர் பயிற்சி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
    X

    ஜோலார்பேட்டை ஆசிரியர் பயிற்சி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட ஆசிரியர் பயிற்சி மாணவி பாதுகாப்பு கேட்டு காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பூவிழி (வயது 21).நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட்.2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (25). டெய்லர். என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் காதல் குறித்து அறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை கூறி காதல் ஜோடியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×