என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்- தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
Byமாலை மலர்31 Jan 2019 9:15 AM GMT (Updated: 31 Jan 2019 9:15 AM GMT)
பாராளுமன்ற தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். #SatyabrataSahoo #FinalVotersList
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 ஆகும்.
இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து, 56 ஆயிரத்து 960 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 367. மூன்றாம் பாலினத்தவர்கள் 5,472 பேர்.
திருப்பரங்குன்றத்தில் இளம் வாக்காளர்கள் அதிகம். இங்கு 7,697 இளைய வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 4,189, பெண்கள் 3,507).
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இங்கு மொத்தம் 6,18,695 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,11,102, பெண்கள் 3,07,518, மூன்றாம் பாலினத்தவர் 75).
குறைந்த வாக்காளர் கொண்ட சட்டமன்ற தொகுதி துறைமுகம் ஆகும். இங்கு மொத்த வாக்காளர்கள் 1,66,518. (ஆண்கள் 83,039, பெண்கள் 79,427, மூன்றாம் பாலினத்தவர் 49).
முதல் முறையாக ஓட்டு போடும் 18 வயது நிரம்பியவர்கள் 4.5 லட்சம் பேர் உள்ளனர்.
வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 97 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1.1.2019 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம்.
தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணுடன் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது.
பாராளுமன்ற தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம். தமிழ்நாட்டில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வந்துள்ளன. அதேபோல் தான் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பாக எங்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல்கள் தயார் நிலையில் உள்ளன.
பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை விரைவில் கூட்டி ஆலோசனை நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. ஓசூர் தொகுதி காலி இடம் பற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து எங்களுக்கு தகவல் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #FinalVotersList
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 ஆகும்.
இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து, 56 ஆயிரத்து 960 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 367. மூன்றாம் பாலினத்தவர்கள் 5,472 பேர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சத்து 38 ஆயிரத்து 656 வாக்காளர்கள் அதிகம்.
திருப்பரங்குன்றத்தில் இளம் வாக்காளர்கள் அதிகம். இங்கு 7,697 இளைய வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 4,189, பெண்கள் 3,507).
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இங்கு மொத்தம் 6,18,695 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,11,102, பெண்கள் 3,07,518, மூன்றாம் பாலினத்தவர் 75).
குறைந்த வாக்காளர் கொண்ட சட்டமன்ற தொகுதி துறைமுகம் ஆகும். இங்கு மொத்த வாக்காளர்கள் 1,66,518. (ஆண்கள் 83,039, பெண்கள் 79,427, மூன்றாம் பாலினத்தவர் 49).
முதல் முறையாக ஓட்டு போடும் 18 வயது நிரம்பியவர்கள் 4.5 லட்சம் பேர் உள்ளனர்.
வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 97 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1.1.2019 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம்.
தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணுடன் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது.
பாராளுமன்ற தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம். தமிழ்நாட்டில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வந்துள்ளன. அதேபோல் தான் இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பாக எங்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல்கள் தயார் நிலையில் உள்ளன.
பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை விரைவில் கூட்டி ஆலோசனை நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. ஓசூர் தொகுதி காலி இடம் பற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து எங்களுக்கு தகவல் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #FinalVotersList
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X