என் மலர்
செய்திகள்

சத்தியமங்கலத்தில் இன்று 2 மணி நேரம் பெய்த மழை
சத்தியமங்கலத்தில் இன்று 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடும் பனிப் பொழிவும், குளிரும், வாட்டி எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சத்தியமங்கலம், பண்ணாரி, அத்தாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு திடீர் மழை பெய்தது.
இந்த மழை தொடர்ந்து 6 மணி வரை 2 மணி நேரம் கொட்டியது. இந்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த திடீர் மழையால் சத்தியமங்கலம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பனி காலம் முடிந்து வெயில் அடிக்க ஆரம்பிக்கும் தருணத்தில் மழை பெய்தது. மக்களை குதூகலப்படுத்தி உள்ளது.
Next Story






