search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு கொலை விவகாரம் ஹாலிவுட் திரில்லர் படம் போன்றது- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
    X

    கொடநாடு கொலை விவகாரம் ஹாலிவுட் திரில்லர் படம் போன்றது- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

    கொடநாடு கொலை விவகாரம் ஹாலிவுட் திரில்லர் படத்தில் வருவது போல சம்பவங்கள் உள்ளது என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். #gramakrishnan #kodanadissue #edappadipalanisamy

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தவறான அணுகுமுறைதான் காரணம். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.

    அதை விடுத்து தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தவறான செயல் ஆகும்.

    கொடநாடு கொலைகள் ஒரு ஹாலிவுட் திரில்லர் படம் பார்ப்பது போல உள்ளது. இந்த வி‌ஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் தேசிய அளவில் புதிய அணி உருவாக வாய்ப்பில்லை.


    பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அனைத்து கட்சிகளின் நோக்கமாக உள்ளது. நிச்சயம் பா.ஜ.க. வரும் தேர்தலில் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். இதற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #gramakrishnan #kodanadissue #edappadipalanisamy

    Next Story
    ×