search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர் ஸ்டிரைகிற்கு எதிர்ப்பு - மகன், மகளுடன் போராட்டம் நடத்திய தொழிலாளி கைது
    X

    ஆசிரியர் ஸ்டிரைகிற்கு எதிர்ப்பு - மகன், மகளுடன் போராட்டம் நடத்திய தொழிலாளி கைது

    ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகன் மற்றும் மகளுடன் போராட்டம் நடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    வால்பாறை கக்கன் காலனியை சேர்ந்த அஜிஸ் என்கிற மஸ்தான் என்ற தொழிலாளி அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் அஜ்மிகா(10), அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மல்(6) ஆகியோரை அழைத்துக்கொண்டு வால்பாறை காந்தி சிலை முன்பு இன்று திடீர் போராட்டம் நடத்தினர்.

    அப்போது ஆசிரியர்கள் போராட்டத்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று கூறினார். இதனையடுத்து வால்பாறை போலீசார் மஸ்தான் மற்றும் மாணவர்களை கைது செய்தனர். இந்த தகவல் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி என்பவருக்கு தெரியவந்ததும் அவர் வால்பாறையில் கைது செய்யப்பட்ட மஸ்தான் மற்றும் மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார். #tamilnews
    Next Story
    ×