என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடையில் முகமூடி கொள்ளை
கொடைரோடு:
திண்டுக்கல் அருகே கொடைரோடு மாலைய கவுண்டன்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர்கள் மற்றும் பாரில் வேலை செய்பவர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.
தோட்டத்து காவலுக்கு வெள்ளிமலை (வயது 45) என்பவர் மட்டும் இருந்தார். நள்ளிரவு சமயத்தில் இங்கு காரில் வந்த முகமூடி கும்பல் வெள்ளிமலையை கத்தியை காட்டி மிரட்டியது. மேலும் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டு கடையை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் சாவகாசமாக அமர்ந்து மதுகுடித்து கும்மாள மிட்டனர். அங்கிருந்த 240 மது பாட்டில்களையும் பணம் ரூ.900த்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர். முகமூடி அணிந்திருந்ததால் வந்தவர்கள் அடையாளம் தெரிய வில்லை. இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை விற்பனை தொகையை விற்பனையாளர்கள் எடுத்துச் சென்றதால் பெருமளவு பணம் தப்பித்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே யாகப்பகன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்தது. தற்போது காவலாளி உள்ள கடையிலேயே அவரை மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்