search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரெடிட் தேர்வு முறையினை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு
    X

    கிரெடிட் தேர்வு முறையினை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு

    கிரெடிட் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த புதிய முறையை ரத்து செய்ய முடியாது என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். #AnnaUniversity #StudentsProtest
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி , குறிப்பிட்ட பாடத்தில்  தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு , கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

    இதனால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைகிறது எனவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது எனவும் கூறினர். மேலும் இதனால் ஓராண்டு காலம் வீண் ஆகிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.



    இதனையடுத்து  அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்  திரண்ட மாணவ, மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கிரெடிட் முறையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மாணவர்களிடம் பல்கலைக்கழக பதிவாளர் குமார்  பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வு விதிகளில் செய்யப்பட்ட மாற்றம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் , தேர்வு சீர்திருத்தங்களை குறிப்பாக கிரெடிட் முறையை ரத்து செய்ய முடியாது என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #AnnaUniversity #StudentsProtest 
    Next Story
    ×