search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
    X

    உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

    சென்னை உயர்நீதிமன்றத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #GIM2019 #HighCourt #GIMCase
    சென்னை:

    சென்னையில் வரும் 23, 24-ந் தேதிகளில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஏமாற்றும் நிறுவனங்களிடம் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மாநாட்டின்போது ஒப்பந்தம் செய்த சில நிறுவனங்கள் முதலீடு செய்யாததால் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தனியார் நிறுவனங்களின் பின்னணி குறித்து ஆராய விதிகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


    இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.2.55 லட்சம் கோடிக்கு முதலீட்டை ஈர்க்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில், நிறுவனங்களுக்கு எப்படி நிலம் ஒதுக்கப்படும்? என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார். #GIM2019 #HighCourt #GIMCase
    Next Story
    ×