என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன்
Byமாலை மலர்20 Jan 2019 1:05 PM GMT (Updated: 20 Jan 2019 4:21 PM GMT)
திண்டுக்கல்லில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன். அவரது மனைவி சாவித்திரி (வயது 60). இவர் தினசரி அதிகாலை நேரத்தில் வாக்கிங் சென்று வருவது வழக்கம்.
அதன்படி இன்று சாவித்திரி வாக்கிங் சென்றார். ஏ.எம்.சி. சாலையில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் வந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் சாவித்திரி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து நகர் வடக்கு பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X