search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் கார் டிரைவர் தற்கொலை
    X

    தூத்துக்குடியில் கார் டிரைவர் தற்கொலை

    தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் மேலஅலங்காரத்தட்டை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 27). கார் டிரைவர். இவரது மனைவி பகவதி (24). இவர்களுக்கு திருமணமாகி 4 மாத குழந்தை உள்ளது. யோகராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். 

    நேற்று இரவு கணவன்-மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த யோகராஜ் இன்று அதிகாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×