என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை சிறையில் இருந்து மேலும் 8 தமிழக மீனவர்கள் விடுதலை
Byமாலை மலர்11 Jan 2019 3:19 AM GMT (Updated: 11 Jan 2019 3:19 AM GMT)
இலங்கை சிறையில் இருந்து மேலும் 8 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சதீஷ், அஜீத், தர்மராஜ், ராமு ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த 4 மீனவர்களையும், அவர்களது படகையும் சிறைபிடித்து சென்றனர்.
இதேபோல அதே பகுதியில் இருந்து கடந்த 7-ந் தேதி கடலுக்கு சென்ற ஜோசப் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த மீனவர்கள் ரனீசன், ராஜா, விஜி, மணிகண்டன் ஆகிய 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் அனைவரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அந்த 8 மீனவர்களும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களையும் விடுதலை செய்தார். ஆனால் சிறைபிடிக்கப்பட்ட இரு படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 28-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் நேற்று முன்தினம் சென்னை திரும்பிய நிலையில், நேற்று மேலும் 8 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சதீஷ், அஜீத், தர்மராஜ், ராமு ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த 4 மீனவர்களையும், அவர்களது படகையும் சிறைபிடித்து சென்றனர்.
இதேபோல அதே பகுதியில் இருந்து கடந்த 7-ந் தேதி கடலுக்கு சென்ற ஜோசப் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த மீனவர்கள் ரனீசன், ராஜா, விஜி, மணிகண்டன் ஆகிய 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் அனைவரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அந்த 8 மீனவர்களும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களையும் விடுதலை செய்தார். ஆனால் சிறைபிடிக்கப்பட்ட இரு படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 28-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் நேற்று முன்தினம் சென்னை திரும்பிய நிலையில், நேற்று மேலும் 8 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X