search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடகை தராததால் தகராறு- கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து
    X

    வாடகை தராததால் தகராறு- கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து

    செவ்வாபேட்டை அருகே வீட்டு வாடகை தராததால் கணவன்-மனைவியை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செவ்வாபேட்டையை அடுத்த கிளாம்பாக்கம் விஷ்ணுநகரில் வசித்து வருபவர் ஜானகிராமன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, 3 வயது மகள், மாமியார் நாராயணி.

    இவர்கள் செங்குன்றத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டாக ஜானகிராமன் சரியாக வாடகை பணம் தரவில்லை. இதனால் அவருக்கும், உரிமையாளர் ஸ்ரீதருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக ஜானகிராமன் திருவள்ளூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதரின் மகன் தியாகர் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று இரவு ஜானகிராமன் வீட்டுக்கு சென்றார்.

    அங்கிருந்த ஜானகிராமன், அவரது மனைவி விஜயலட்சுமியை கத்தியால் சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி ரந்தனர். இதை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து செவ்வாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×