search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் உள்பட 23 பேர் கைது - மோட்டார் சைக்கிள் பறிமுதல்
    X

    மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் உள்பட 23 பேர் கைது - மோட்டார் சைக்கிள் பறிமுதல்

    சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், மது மற்றும் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைசாவடி அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து புதுச்சேரி மாநில சாராயம் கடத்தி வந்த செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துபிள்ளை மனைவி ராஜம் (வயது 45), அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி சத்யா (31) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், வெளிப்பாளையம், தெற்கு நல்லியான்தோட்டம், செல்லூர், கீழ்வேளூர், மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயிரத்து 925 லிட்டர் சாராயமும், 481 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×