search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணமாகாத ஏக்கத்தில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
    X

    திருமணமாகாத ஏக்கத்தில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

    திருவெறும்பூரில் திருமணமாகாத ஏக்கத்தில் அரசு ஊழியர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெறும்பூர்:

    திண்டுக்கல் வீரபுரையான் பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (30). இவர் திருப்பூர் தாராபுரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். கருப்பையாவுக்கு திருமணமாக வில்லை. 

    இந்நிலையில் கருப்பையா திருநள்ளாறுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ரெயிலில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  இந் நிலையில் ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்றது. உடனே கருப்பையா இதில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் எலி மருந்தை சாப்பிட்டு ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா இறந்தார். 

    இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் திருமணமாக வில்லை என்ற ஏக்கத்தில் கருப்பையா விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. 
    Next Story
    ×