என் மலர்
செய்திகள்

திருப்பத்தூர் அருகே பாலத்தில் மோதி லாரி கவிழ்ந்தது- டிரைவர் பலி
திருப்பத்தூர் அருகே மணல் லாரி பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருப்பத்தூர்:
புதுக்கோட்டை மாவட்டம், அறங்தாங்கி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் காசி. இவரது மகன் மூர்த்தி (வயது 45). டிப்பர் லாரி டிரைவர்.
இவர் புதுக்கோட்டையில் இருந்து லாரியில் மணல் ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் புறப்பட்டார். நெடுமரம் அருகே வந்தபோது, எதிர் பாராத விதமாக லாரி பாலத்தில் மோதியது.
இதனால் லாரி கவிழ்ந்தது. அதன் பின் சக்கரங்கள் தனியாக கழன்றன. இந்த விபத்தில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story