search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமங்கலத்தில் கல்லூரி சென்ற நர்சிங் மாணவி மாயம்
    X

    வடமங்கலத்தில் கல்லூரி சென்ற நர்சிங் மாணவி மாயம்

    வடமங்கலத்தில் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற நர்சிங் மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே வடமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் லட்சுமி (வயது18) இவர் பாகூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக லட்சுமி பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் லட்சுமி இல்லை. இதையடுத்து மாரிமுத்து தனது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    முதல்கட்ட விசாரணையில் லட்சுமிக்கும் மருதூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமியை அந்த வாலிபர் கடத்தி சென்றிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×