என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தாமாக முன்வந்து பிளாஸ்டிக்கை ஒழித்த வியாபாரிகள்
By
மாலை மலர்2 Jan 2019 11:56 AM GMT (Updated: 2 Jan 2019 11:56 AM GMT)

குமரி மாவட்டத்தில் உள்ள கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர். #plasticban
குமரி மாவட்டத்தில் உள்ள கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிளாஸ்டிக் பைகள், கப்புகள், பிளேட்டுகளை கடைகளில் இருந்து அகற்றி அவற்றுக்கு பதில் மாற்று பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் துணிப்பை கொண்டு வரும்படி அறிவுறுத்துகிறார்கள். அவ்வாறு துணிப்பை கொண்டு வராத வாடிக்கையாளர்களுக்கு அட்டைப் பெட்டிகளில் பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.
இதேபோல துணிக்கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகள் வினியோகிக்கப்பட்டன.
மீனாட்சிபுரம், கோட்டார், வடசேரி பகுதியில் உள்ள டீக்கடைகளில் பார்சல் டீ-க்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகள் நிறுத்தப்பட்டன. பேப்பர் கப்புகளும் அப்புறப்படுத்தப்பட்டன. அவற்றுக்கு பதிலாக பார்சல் டீ, காபி வாங்குபவர்கள் கட்டாயம் பாத்திரம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டனர். டாஸ்மாக்கடைகளில் உள்ள பார் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருந்தனர். பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு பார் உரிமையாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தர விடப்பட்டது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டன. பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு பதிலாக வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன. தின்பண்டங்களுக்கு வழங்கப்படும் பேப்பர் தட்டுகளுக்கு பதில் சில்வர் தட்டுகள் வினியோகிக்கப்பட்டது. #plasticban
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் துணிப்பை கொண்டு வரும்படி அறிவுறுத்துகிறார்கள். அவ்வாறு துணிப்பை கொண்டு வராத வாடிக்கையாளர்களுக்கு அட்டைப் பெட்டிகளில் பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.
இதேபோல துணிக்கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகள் வினியோகிக்கப்பட்டன.
மீனாட்சிபுரம், கோட்டார், வடசேரி பகுதியில் உள்ள டீக்கடைகளில் பார்சல் டீ-க்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகள் நிறுத்தப்பட்டன. பேப்பர் கப்புகளும் அப்புறப்படுத்தப்பட்டன. அவற்றுக்கு பதிலாக பார்சல் டீ, காபி வாங்குபவர்கள் கட்டாயம் பாத்திரம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டனர். டாஸ்மாக்கடைகளில் உள்ள பார் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருந்தனர். பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு பார் உரிமையாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தர விடப்பட்டது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டன. பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு பதிலாக வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன. தின்பண்டங்களுக்கு வழங்கப்படும் பேப்பர் தட்டுகளுக்கு பதில் சில்வர் தட்டுகள் வினியோகிக்கப்பட்டது. #plasticban
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
