search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் அக்காள்-தங்கை மாயம்
    X

    நாகர்கோவிலில் அக்காள்-தங்கை மாயம்

    நாகர்கோவிலில் வீட்டில் இருந்த அக்காள்-தங்கை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பூதத்தான். இவரது மனைவி ஜானகி(வயது47). இவர்களுக்கு 2 மகன்களும், பேச்சியம்மாள்(19), சீதா லெட்சுமி(17) என 2 மகள்களும் உள்ளனர். 

    இந்த நிலையில் மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்ததாக தெரிகிறது. தற்போது திருமணம் வேண்டாம். சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்வதாகவும் அவரது மகள் கூறினார். இந்த நிலையில் நேற்று தனது தாயார் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். வீட்டில் 2 மகள்கள் மட்டும் தனியாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து தாயார் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த 2 மகள்களும் மாயமாகி இருந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த தாயார் தனது மகள்களான பேச்சியம்மாள், சீதாலெட்சுமி மாயமானது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். ஆனால் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினர். இதையடுத்து தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் அவர்கள் இல்லாததால் இது குறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முகமது சம்சீர் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான அக்காள்- தங்கையான பேச்சியம்மாள், சீதாலெட்சுமி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் எதற்காக வீட்டை விட்டு சென்றனர்? எங்கு சென்றார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×