என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரவாயலில் 3 கடைகளில் கொள்ளை
போரூர்:
மதுரவாயல் அடுத்த வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர உதிரி பாகங்கள் கடை, டிஜிட்டல் பேனர் கடை மற்றும் ஒரு பெட்டி கடை அடுத்தடுத்து உள்ளன.
காலையில் ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது 3 கடைகளின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கடைகளில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. 3 கடைகளிலும் மொத்தம் ரூ. 48 ஆயிரத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த கடைகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்